ஊராட்சித் தலைவர் வெட்டிக்கொலை -

by Staff / 03-04-2023 05:40:41pm
ஊராட்சித் தலைவர் வெட்டிக்கொலை -

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள ஷிர்கான் கிராம ஊராட்சித் தலைவராக இருந்தவர் பிரவீன் சாகிப்ராவ் கோபாலே. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் சனிக்கிழமை இரவு அங்குள்ள கோயில் முன் நின்று தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், பிரவீனை கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

 

Tags :

Share via