வாட்ஸ்அப்பில் ஆபாச குறுஞ்செய்தி.

by Staff / 27-09-2022 04:19:58pm
வாட்ஸ்அப்பில் ஆபாச குறுஞ்செய்தி.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அசோகன் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். மருதூரைச் சேர்ந்த இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் உள்ளார். பள்ளிக்கு அருகிலேயே தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். ஆசிரியர் அசோகனிடம் அப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகள் டியூசன் படித்து வருகிறார்கள். இந்நிலையில், டியூசன் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் அசோகன் வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 18 மாணவிகள் கடந்த 21ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகாரளித்தனர். இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது டியூஷன் படித்த 31 மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் 12 பேர் கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோகனை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via