ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு

by Staff / 25-04-2024 04:28:32pm
 ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு

பீகார் தலைநகர் பாட்னாவில் ரயில்வே சந்திப்பு அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர். பல ஊழியர்கள் ஓட்டலின் மேற்கூரையில் சிக்கிக்கொண்டனர். ஓட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் கருதி நாசமானது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via