தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

by Staff / 01-04-2023 02:11:54pm
தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர், 2020 ஆம் ஆண்டு காவல் துறையினர் தாக்கியதில் உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

Tags :

Share via