100 நாள் வேலை: தினக்கூலி ₹300 ஆக  உயர்த்த ப்படும் -  அமைச்சர் பெரியகருப்பன் 

by Editor / 03-08-2021 05:10:25pm
100 நாள் வேலை: தினக்கூலி ₹300 ஆக  உயர்த்த ப்படும் -  அமைச்சர் பெரியகருப்பன் 

 

100 நாள் வேலைத் திட்டத்தில் தினக்கூலி 300 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், '100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ300 கொடுப்பதற்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார்,


மாநகராட்சிகளுக்கு அருகே உள்ள ஒரு சில ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய விருப்பம் தெரிவிக்கின்றனர். அதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்.ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் மொத்தமாக உள்ளாட்சி பணிகளை எடுத்து காலதாமதமாக மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால தாமதமானால் டெண்டர் ரத்து செய்யப்படும்.அதிக அளவில் ஜல் ஜீவன் திட்டத்தில் பணிகள் தரமாக இல்லை என புகார்கள் வந்துள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை..


அம்மா இருசக்கர வாகன திட்ட செயல்பாடு, நிதி நிலைமையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

 

Tags :

Share via