குஜராத் பயனாளிகளுடன்  பிரதமர் மோடி உரையாடல்

by Editor / 03-08-2021 05:05:35pm
 குஜராத் பயனாளிகளுடன்  பிரதமர் மோடி உரையாடல்


 

குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி,காணொலி மூலம் உரையாடினார்.


கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பினை குறைப்பதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், பிரதமரால் துவக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நலத்திட்டமாகும். 
இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினால் பலனடையும் அனைத்துப் பயனாளிகளுக்கும் நபருக்கு ஐந்து கிலோ வீதம் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படுகிறது.


இந்தநிலையில் இத்திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக. பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய நிகழ்வு குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.


இதன் தொடக்க நிகழ்ச்சியாக பிரதமர்  மோடி, குஜராத்தில் பிரமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் காணொலி மூலம் உரையாடினார்.
பிரதமரின் காணொலி உரையாடல் நிகழ்ச்சியில், குஜராத் மாநில முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via