2 நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு

by Editor / 25-09-2021 10:57:52am
 2 நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு

சென்னையை சேர்ந்த 2 நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. பெரு நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு 2 நிதி நிறுவனங்களும் அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளன. 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது.

 

Tags :

Share via