16வயது மாணவனை காமப்பசிக்கு பயன்படுத்திய டியூசன் ஆசிரியை கைது.

by Editor / 09-11-2022 09:50:05pm
16வயது மாணவனை காமப்பசிக்கு பயன்படுத்திய டியூசன் ஆசிரியை கைது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணிதபாடத்தில் முதுகலை  பட்டம் பெற்ற இவர், அதே பகுதியில் டியூஷன் எடுத்து வருகிறார். மேலும், அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் உடற்பயிற்சி கூடத்தில்  பயிற்சியாளராகவும் இவர் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தோற்று பரவல்காரணமாக ஊரடங்கின் போது பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் இவரது டியூசன் மையத்துக்கு அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்தனர்.இந்நிலையில், தன்னிடம் டியூசனுக்கு சேர்ந்த மாணவர்களில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மீது ஆசிரியை சுரேகாவுக்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மற்ற மாணவர்களை காட்டிலும் அவனுக்கு கூடுதல் சலுகைகளை ஆசிரியை வழங்கினார். எப்போது வேண்டுமானாலும் டியூசனுக்கு வரலாம்; ஆசிரியை வீட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என முழுமையான அனுமதியை அவனுக்கு ஆசிரியையால் வழங்கப்பட்டது. முதலில், தன் மீது ஆசிரியைக்கு அளவு கடந்த அன்பு உள்ளது என நினைத்த மாணவனுக்கு போக போக தான் அந்த ஆசிரியையின் சுயரூபம் தெரியவந்தது.

உடலில் பல இடங்களில் தொடுவது, சீண்டுவது என ஆசிரியையின்  சீண்டல்கள் தவறாக போவதையறிந்த அந்த மாணவன் உணரத் தொடங்கினான். ஆனால், இதுகுறித்து வீட்டில் சொல்ல பயமாக இருந்ததால் அவன் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை. மாணவனின் மவுனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட  ஆசிரியை, மாணவனுக்கு பாலியல் தொந்தரவுகளை தரத் தொடங்கினார். ஆனால் மாணவன் எதற்கும் மசியாததால், ஒருகட்டத்தில் அவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த ஆசிரியை, மாணவன் தன்னிலை மறந்ததும் அவனை பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு அந்த மாணவனை ஆசிரியை விமலா பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

தற்போதுவரை இந்த கொடூரம் தொடர்ந்து இருந்துவந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் கடந்த சில நாட்களாக மிக சோர்வாகவும், யாருடனும் பேசாமலும் இருந்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவரது பள்ளி ஆசிரியர்கள் அவனுக்கு பாடத்தில் கவனம் செலுத்துமாறு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். அப்போது அந்த மாணவன் தனக்கு டியூஷனில் ஆசிரியையால்  நேர்ந்த கொடுமையை ஆசிரியர்களிடம் அவன் தெரிவித்தான்.இதையடுத்து  மாணவனின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அவனது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், ஆசிரியை சுரேகாவிடம் விசாரணை நடத்தினர். இதில், மாணவனை பலாத்காரம் செய்ததை சுரேகா  ஒப்புக்கொண்டதை அடுத்து போலீஸார் அவரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இந்த சம்பவம் கேரளமாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via