நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களில் திடீர் தீ விபத்து 40 கார்கள் தீயில் கருகி நாசம்

by Staff / 14-06-2022 02:30:44pm
நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களில் திடீர் தீ விபத்து 40 கார்கள் தீயில் கருகி நாசம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நீதிமன்ற காவலில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. குல்சன் இக்பால் பகுதியிலுள்ள அஜித் பாட்டை பூங்காவிற்கு அருகில் நூற்றுக்கும் அதிகமான பழைய இருசக்கர வாகனம் குவியலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த. வாகனங்கள் தீப்பிடித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 440 இருசக்கர வாகனங்கள் 40 கார்கள் மற்றும் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via