ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 100 கோடி சொத்துக்கள் முடக்கம்

by Editor / 21-06-2022 01:41:18pm
ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 100 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஆருத்ரா கோல்ட்டிரேடிங்  நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .சுமார் 70 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன அதிக வட்டி தருவதாக அறிவிக்கப்பட்டு  கவர்ச்சிகரமான திட்டங்கள் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் கடந்த மே மாதம் 24ஆம் தேதி  இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. கணக்கில் காட்டப்படாத 3 கோடியே நாற்பத்தி ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு நிதி நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இயக்குனர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் என 14 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via