கூலித்தொழிலாளியை கொலை செய்த பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது

by Editor / 21-06-2022 03:21:39pm
கூலித்தொழிலாளியை கொலை செய்த பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது

திண்டுக்கல் மாவட்டம் ராஜதானி கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் செங்கல் காளவாசல் தொழில் பார்த்து வருகிறார்.இந்நிலையில், வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ராஜ்குமாரை பிரபல ரவுடி மனோஜ் தனது கூட்டாளி அன்பு என்பவருடன் குடிபோதையில் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிப்போய், மனோஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்குமார் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமார் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இதை தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராஜதானி கோட்டையில் கடந்த பங்குனி மாதம் நடந்த திருவிழாவின் போது ராஜ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து வைத்த பேனரை மனோஜ் சேத படுத்தியுள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில் மனோஜ் மனோஜ் ஒருவரை வெட்டிவிட்டு அந்த வழக்கில் சிறை சென்றுள்ளார். தற்போது ஜாமீனில் வெளிவந்தவர் தான் ஜெயிலுக்குப் போக காரணமாக இருந்த ராஜ்குமாரை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.மனோஜ்  மீது இரண்டு குண்டர் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும்  போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி   மனோஜ் மற்றும் அவரது கூட்டாளி அன்பு ஆகிய இருவரையும் போலீஸார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via