பிரபல ஜவுளி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.

by Editor / 02-11-2022 06:38:17pm
பிரபல ஜவுளி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் குமார் இவருக்கு சொந்தமான மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடை முசிறி, துறையூர், பரமத்தி, வேலூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு தீபாவளி வேளையில் வாடிக்கையாளர்களுக்குபோலியான பில் கொடுத்து, வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் (சிவா டெக்ஸ்டைல்ஸ்) கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் நகரம், குளித்தலை மற்றும் சேலம், திருப்பூர், ஊட்டி உட்பட ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகள், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை.இதன் ஒருபகுதியாக சேலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள ஜவுளி கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர்.காலை 10 மணிக்கு துவங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருமானவரித்துறையினர் நான்கு கார்கள் மூலமாக பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் குழுவாக வந்து சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.


 

 

Tags :

Share via