விருத்தாச்சலத்தில் வேட்டையாட வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பெண் காயம்

by Editor / 26-06-2022 02:13:28pm
விருத்தாச்சலத்தில் வேட்டையாட வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பெண் காயம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வந்த மர்ம நபர்கள் தவறுதலாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வலசை  பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் நேற்று நள்ளிரவு வீட்டின் முன் அமர்ந்திருந்த போது வேட்டையாட வந்த மர்ம நபர்கள் தவறுதலால் சுட்டதில் அவர் மீது பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தது  இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via