துருக்கியில் கொட்டி தீர்த்த கன மழை சீறிப்பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

by Editor / 28-06-2022 12:53:26pm
துருக்கியில் கொட்டி தீர்த்த கன மழை சீறிப்பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

 துருக்கி நாட்டின் கடல் பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பலம் வீடியோ வெளியாகியுள்ளது.அந்நாட்டின் மாகாணங்களில் கனமழை  பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்பேலோ  பகுதியில் ஓடை ஒன்றில் சீறிப்பாயும் வெள்ளத்தில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. சாலை ஓரத்தில் இருந்த வீடுகளுக்கும் இடிந்து விழுந்தன இதுவரை 3 மாதங்களிலிருந்து 235 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை நீடிக்கும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via