நீட் தேர்வுக்கு எதிராக ஆகஸ்ட் 20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு
நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி, இணைந்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கைவருமாறு:தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து அவர்களின் உயிரை பறிக்கின்ற உயிர் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்து இருக்கிறது. மாணவர்களை மட்டும் இன்றி பெற்றோரையும் மரணக் குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு .க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுகவின் இளைஞர்அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதாரா போராட்டம் நடத்தப்பட உள்ளதாக 3 அணிகளின் சார்பில் கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags : ஆகஸ்ட் 20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு