நள்ளிரவில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

by Staff / 18-03-2024 12:18:19pm
நள்ளிரவில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

மேற்கு வங்க மாநிலம் கார்டன் ரீச் பகுதியில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டிடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 2 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் உள்ள குடிசைகளில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via