லூதியானா குண்டு வெடிப்பு: சிக்கிய குற்றவாளி

by Staff / 02-12-2022 02:34:31pm
லூதியானா குண்டு வெடிப்பு: சிக்கிய குற்றவாளி

2021 ஆண்டு டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் வைத்து குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சீக்கிய இளைஞர் பெருமன்றத்தின் தலைவர் ’லக்பீர் சிங் ரோடின்’ உத்தரவுபடி, நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதும், ’ஹர்பிரீத் சிங்’ என்பவர் பாகிஸ்தானில் இருந்து வெடிப்பொருட்களை பெற்று வெடிக்க செய்ததும் தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் பயங்கரவாதியான ஹர்பிரீத் சிங் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதனுடன், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸூம் அனுப்பப்பட்டது. இந்தநிலையில், கோலாலம்பூரில் இருந்து டெல்லி திரும்பிய ஹர்பிரீத் சிங்கை, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via