அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட காவல்துறையினர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர். பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் யூனிஸ் திவ்யா பாரதி தம்பதியினருக்கு பிறந்த ஐந்து நாட்கள் ஆன பெண் குழந்தை நேற்று அதிகாலை மர்ம நபர்களால் கடத்தப்பட்டு சுமார் 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில் இரண்டு பேர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 அறையில் கேரளா மாநிலம் கொடுவாயூர் பகுதியில் கடத்தப்பட்ட பெண் குழந்தை கண்டுபிடித்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மற்றொரு நபரை தேடி வருவதாகவும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
Tags :