மதுபோதையில் நடைபெற்ற சண்டையில் இளைஞர் கொலை

by Editor / 10-07-2022 12:52:29pm
மதுபோதையில் நடைபெற்ற சண்டையில் இளைஞர் கொலை

திண்டுக்கல்லில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்மாந்துறையை சேர்ந்த பெருமாள் தனது நண்பர்கள் வீரமணி, சேசுராஜ், தமிழ் ஆகிருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையில் நாண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெருமாளை மூன்று பேரும் வெட்டி கொலை செய்தனர்.
 
தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via