கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஓரு நபரின் சடலம் மீட்பு

by Editor / 20-07-2022 09:18:20pm
கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஓரு நபரின் சடலம் மீட்பு

தஞ்சை மாவட்டம்  அணைக்கரை அருகே மதகு சாலை கொள்ளிடம்  ஆற்றில் நேற்று மீன் பிடிக்கும் போது  3நபர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.. இதில் இன்று மதியம் மனோஜ் என்ற வாலிபரின் உடல் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே புரசங்காடு பகுதியில் இருந்து மீட்க்கப்பட்ட நிலையில் மாலையில் ஆகாஷ்(24) என்பவரது உடல் மணல்மேடு முட்டம் பாலம் அருகே  கொள்ளிடக்கறையின் தீயணைப்பு மீட்பு குழுவினரின் உதவியுடன் மீட்கப்பட்டன.மீதமுள்ள ஒருவரது உடலைத்தேடி வருகின்றனர்.

 

Tags : One more body was recovered after being washed away in Kollidam river

Share via