மாநிலங்களவை எம்.பி.ஆக பதவி ஏற்க இளையராஜா டெல்லி புறப்பட்டு சென்றார்.

by Editor / 24-07-2022 11:48:59pm
மாநிலங்களவை எம்.பி.ஆக பதவி ஏற்க இளையராஜா டெல்லி புறப்பட்டு சென்றார்.

விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியற்றுக்கொண்டனர் .இளையராஜா பதவி ஏற்கவில்லை . அமெரிக்காவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. இந்த நிலையில் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக நாளை பதவி ஏற்க உள்ளார்.இதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

 

Tags : Ilayaraja left for Delhi to take office as Rajya Sabha MP.

Share via