கருப்பு பூஞ்சை மருந்து கேட்டு  மத்திய அமைச்சருக்கு முதல்வர்  கடிதம்

by Editor / 03-06-2021 09:08:59pm
கருப்பு பூஞ்சை மருந்து கேட்டு  மத்திய அமைச்சருக்கு முதல்வர்  கடிதம்

 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்தை தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் ஒதுக்கீடு செய்யக்கோரி மத்திய சுகாதாரத் துறை
அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழகத்திற்கு இதுவரை 1,790 மருந்து குப்பிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு 30,000 மருந்துகளை வழங்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை 673 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரித்துவரும் கரும்பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் மருந்தை வழங்கவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via