பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை
இன்று பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை.. அவர் இதற்கு முன்பு ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் தனது மூன்று நிமிடஉரை நிகழ்ச்சி நிரலில் நீக்கி விட்டதாகவும் அதனால் உங்களை நான் நேரடியாக வரவேற்க முடியாத நிலையில் இருப்பதனால் இந்த ட்விட்டர் மூலமாக உங்களை வரவேற்கிறேன் என்று அவர் தமது மாநிலத்திற்கு தேவையான சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். ஆறு மாதத்தில் தாங்கள் ஏழாவது முறையாக ராஜஸ்தான் வந்திருக்கிறீர்கள் இந்த வருகையின் மூலமாக தாங்கள் எனது மாநிலத்திற்கு தேவையான சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ராணுவம் கடற்கரை விமானப்படைகளில் ஆட்சி அமைப்பு செய்வதற்காக அக்னி வேர் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ராஜஸ்தான் அரசு 21 லட்சம் விவசாயிகளின் 15,000 கோடி மதிப்புரான கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாகவும் தேசியமயமாக்காட்ட வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஒரு தீர்வு திட்டத்தை அனுப்பி உள்ளதாகவும் விவசாயிகளின் பங்குகளை செலுத்த வேண்டும் என்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை ராஜஸ்தான் சட்டசபை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இதுகுறித்து மத்திய அரசு விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு கோரி உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டரில் அசோக் கெய்லாட்ஜி நெறிமுறைப்படி நீங்கள் முறையாக அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்றும் இந்த நிகழ்ச்சியில் உங்கள் வருகையின் மூலமாக அது சிறப்பு பெறும் என்றும் தெரிவித்துள்ளார் இன்றைய திட்டத்தில் வளர்ச்சி பணிகளில் உங்களுடைய பெயரும் இடம் பெற்று இருக்கிறது என்பதனால் நான் உங்களை வரவேற்கிறேன் என்றும் அவர் அந்த டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார் .இதற்கிடையே முதல்வா் அசோக்கெய்லாட் தம் வீட்டில் பத்தாிக்கையாளா் சந்திப்பு நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :