ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 48 லட்சம் பணம் கொள்ளை மேற்கு காவல் போலீசார் விசாரணை

by Admin / 10-04-2024 12:24:44am
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 48 லட்சம் பணம் கொள்ளை மேற்கு காவல் போலீசார் விசாரணை

கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர் சிங்கராஜ் இவர் கயத்தார் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார் இவரது மகன் மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.மனோகரன் மற்றும் மனைவி அவரது தாயார் அனைவரும்  உறவினர்கள் வீட்டிற்க்காக சென்னை சென்று விட்டனர்.வீட்டில் சிங்கராஜ் மட்டும் இருந்து வந்தார் இந்நிலையில் நேற்று இரவு வெளியே சென்று விட்டு வீடு  திரும்பும் பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பிரோவில்  இருந்த 48 லட்ச ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது இதனை அடுத்து  சிங்கராஜ் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் துறையினர் கைரேகை பிரிவினர் வந்து சோதனை மேற்கொண்டு சென்றனர் மேலும் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டியில்தொழிலதிபர் வீட்டின் 48 லட்சம் பணம் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 48 லட்சம் பணம் கொள்ளை மேற்கு காவல் போலீசார் விசாரணை
 

Tags :

Share via