நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட அகதி சென்னை புழல் சிறைக்கு மாற்றம்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு அளிக்க வந்த இலங்கைத் தமிழர் ஜாய் அங்கிருந்த காவலர்களிடம் தன்னை சொந்த ஊருக்கு அனுப்ப சொல்லி ரகளை ஈடுபட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தாக்க முயற்சித்தல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல்,தற்கொலைக்கு முயற்சித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு நபர்கள் குற்றம் புரிந்தால் அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். இதனை தொடர்ச்சியாக ஜாய் இன்று காலை சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tags :