3- வது  முறையாக பிரதமராகும் மோடி- டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் [சர்வேயில்] 64% பேர்ஆதரவு.

by Editor / 05-02-2024 08:31:39am
3- வது  முறையாக பிரதமராகும் மோடி- டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் [சர்வேயில்] 64% பேர்ஆதரவு.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மக்களவை தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும்  ETG இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது..அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய  ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெரும்பான்மை பெறும் என்று 91 சதவீதம் பேர்  தெரிவித்துள்ளனர்.. அந்த கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என 45 சதவீதம் பேரும், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என பலர் தெரிவித்துள்ளனர்..3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார் என சுமார் 64 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.. ராகுல் காந்திக்கு 19%, மம்தாவுக்கு 15%, கெஜ்ரிவாலுக்கு 12%, ஸ்டாலினுக்கு 6% பேர் வாக்களித்துள்ளனர்.. இவர்கள் யாருமே வேண்டாம் என 40% பேர் வாக்களித்துள்ளனர்.

 

Tags : 3 வது  முறையாக பிரதமராகும் மோடி டைம்ஸ் நவ் நடத்திய சர்வேயில் 64% பேர்ஆதரவு.

Share via