மிட்டாய் வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் 3பேர் கைது

by Editor / 30-07-2022 10:08:00pm
மிட்டாய் வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் 3பேர் கைது

கேரளமாநிலத்தில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து  கேரளாவிற்கு வாகனங்களிலும்,ரயில் மூலமும் போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் ஆர்.பி .எப்.வீரர்கள் கைப்பற்றுவதும் நடந்துவருகிறது.இந்த நிலையில் மாநில எல்லைகளில் போலீசார் தீவிரமான சோதனைகள் உட்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து தின்பண்டங்கள் ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்தை ஆரியங்காவு சோதனைச் சாவடியில் போலீசார் மறித்து சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் ஒன்னரை கிலோ கஞ்சா வைத்திருந்தது காவல்துறையின் சோதனையில் சிக்கவில்லை அந்த வாகனத்தை போலீசார் முழுமையாக சோதனை மேற்கொண்டதில் அந்த வாகனத்தில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது இதன் தொடர்ச்சியாக வாகனத்தில் இருந்த  மூன்று நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் புளியங்குடி பகுதியைச் சார்ந்த அப்பாதுரை,குமார்,பொம்மையன்,ஆகியோர்  என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று நபர்களை கைது செய்த பொலிசார் அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா வையும் கைப்பற்றினர்.அப்பாதுரை,குமார்,பொம்மையன்,ஆகிய 3 நபர்களிடமும் தென்மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதில் இருந்து அதிக அளவில் தற்போது தென்காசி மாவட்டம் புளியரை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிட்டாய் வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் 3பேர் கைது
 

Tags :

Share via