புதிய விமான நிலையத்தின் தற்போதைய உத்தேச மதிப்பு ரூபாய் 20 கோடி முதலமைச்சர் ஸ்டாலின்

by Editor / 02-08-2022 03:20:53pm
புதிய விமான நிலையத்தின் தற்போதைய உத்தேச மதிப்பு ரூபாய் 20 கோடி முதலமைச்சர் ஸ்டாலின்


பரந்தூரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையம் 10 கோடி பயணிகளை கையாளக் கூடிய திறன் உடையதாக இருக்கும் என்றும் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் இரண்டு தளங்கள் முனையங்கள் இணைப்பு பாதைகள் விமான நிறுத்துமிடம் போன்ற வசதிகளுடன் புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  புதிய விமான நிலையத்தின் உத்தேச திட்ட மதிப்பு 20 கோடி ரூபாய் என்றும் தேர்வான இடத்திற்கு ஒப்புதல் பெற விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via