மாமல்லபுரத்தில் உள்ள உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

by Editor / 03-08-2022 04:35:24pm
மாமல்லபுரத்தில் உள்ள உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாமல்லபுரத்தில் நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 187 நாடுகளில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் மாமல்லபுரத்தில் உள்ள இருபத்தி மூன்று நட்சத்திர விடுதிகளில் தங்கி உள்ளனர். இந்தநிலையில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட வீரர்கள் தங்கி உள்ள விடுதிகளில் உணவு தயாரிக்கும் இடத்திலும் காலாவதியான பொருள்கள் உள்ளனவா என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

Tags :

Share via