டாஸ்மாக் கடையின் பார் காசாளர் அரிவாளால் சரமாரி வெட்டி கொலை உறவினர்கள் கைது

by Editor / 17-08-2022 03:15:52pm
டாஸ்மாக் கடையின் பார் காசாளர் அரிவாளால் சரமாரி வெட்டி கொலை உறவினர்கள் கைது

 கோவை மாவட்டம் சிறுமுகை அருகே டாஸ்மாக் பாரில் கூலிப்படையினரை வைத்து கொன்ற வழக்கில் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டார். வெள்ளிகுப்பம் பாளையத்தில்இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் காளியப்பன் என்பவர் காசாளராக கடந்த மூன்று மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சமையல் ஈடுபட்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாருக்குள் நுழைந்து அவரை திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சம்பவத்தில் தொடர்புடைய காளியப்பன் உறவினரான. சிவகங்கையை சேர்ந்த ராஜ கண்ணப்பன் கைது செய்தனர். விசாரணையில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via