விமானம் மூலம் போதைப்பொருள் கடத்திய வாலிபர்கள் கைது

by Editor / 20-08-2022 12:28:49pm
விமானம் மூலம் போதைப்பொருள் கடத்திய வாலிபர்கள் கைது

விமானம் மூலம் கேரளாவுக்கு போதைப் பொருள் கடத்திய இரு இளைஞர்களை திருச்சூர் கிழக்கு போலீசார் கைது செய்தனர். கேச்சேரியைச் சேர்ந்த தயாள், அகில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அரை கிலோ எம்.டி.எம்.ஏ., கொரியர் மூலம் அனுப்பப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.

கொச்சியில் உள்ள ஏஜென்சி மூலம் இவர்கள் போதை பொருட்களை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.டெல்லியில் முகாமிட்டுள்ள நைஜீரிய கும்பல் இவர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததும் தெரியவந்தது.இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகின்றது.

 

Tags :

Share via