மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிவி மெக்கானிக் படுகொலை
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (55). திருமணம் ஆகாத நிலையில் இவர் உறவினர் வீட்டில் தங்கி டிவி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் சேரன் சாலையில் நீரோடை அருகே நண்பர் முருகேசன் மது குடித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் முருகேசன் சந்திரனை வெட்டியுள்ளார். வெட்டு காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து டிஎஸ்பி நாகராஜன், ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
Tags :