பஸ் நிலையத்தில் ஆண் பிணம்
சங்ககிரி புதிய பஸ் நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து சங்ககிரி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி னர். அப்போது அவர் யார்? , எந்த ஊரை சேர்ந்தவர்? என்று அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து உடலை கைப் பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :