15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

by Staff / 23-08-2023 04:54:08pm
15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

மேற்கு வங்கத்தில் நாட்டையே உலுக்கும் அடுத்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. சிலிகுரியில் 15 வயது சிறுமியை 19 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். திங்கள்கிழமை இரவு சிலிகுரி நகரின் காட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதி மக்கள் சடலத்தை அடையாளம் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அம்மாநில மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

 

Tags :

Share via