சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை - உதயநிதி
நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் சேகர் பாபு எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டு இருந்தார்கள். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தது. திராவிட மாடலால் தான் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Tags :