கரூரில் 12 ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

by Editor / 20-11-2021 03:54:47pm
கரூரில் 12 ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில், அரசு காலனி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும், 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அந்த மாணவி தற்கொலைக்கு முன்னர்  எழுதிய கடிதத்தில்

“பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கூற பயமாக உள்ளது” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலைக் குறித்து வெங்கமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via