புலிகளுக்கு விஷம் வைத்த நபர் கைது

by Staff / 12-09-2023 12:18:53pm
புலிகளுக்கு விஷம் வைத்த நபர் கைது

ஊட்டியில் 2 நாட்களுக்கு முன்னதாக, 2 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புலிகளின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு வனத்துறை அனுப்பிவைத்தது. அதில் புலிகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதை கண்டறிந்தனர். இந்த நிலையில், உயிரிழந்த மாட்டின் மீது விஷம் தடவி 2 புலிகளை கொன்றதாக, மாட்டின் உரிமையாளர் சேகர் என்பவரை வனத்துறை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via