தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்ட திமுக மற்றும் அமமுக வினர் மீது வழக்கு பதிவு..
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.அதன்படி பல்வேறு கட்சியினர் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அ.ம.மு. க. வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தும் ட்ரம்ஸ் வாசித்தும் தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்ட அ.ம.மு.க. வினர் மீது வழக்கு பதிவு.அம்மா மக்கள் முன்னேற்ற கழக பகுதி கழக செயலாளர் சாஜஹான்,பாலமுருகன் என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேபோல காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அஹ்ர ஹாரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் தமிழ் பிரியன், குமரவடிவெல் என்பவர்கள் மீது கருங்கல் பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Tags :