தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து இருவர் பலி; பலர் காயம்

by Staff / 23-08-2023 12:24:05pm
தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து இருவர் பலி; பலர் காயம்

சென்னையில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பாலக்காடு திருவாழிக்கு அருகே விவசாய அபிவிருத்தி வங்கிக்கு முன்பாக நடந்த இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பேருந்தில் ஊழியர்கள் உட்பட 38 பேர் இருந்தனர். பேருந்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுநர் உறங்கியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via