நண்பனின் மனைவியை கொலை செய்த இளைஞர்

by Staff / 23-08-2023 12:28:04pm
நண்பனின் மனைவியை கொலை செய்த இளைஞர்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் சுந்தர்- தாரணி தம்பதி வசித்து வருகின்றனர். இந்நிலையில், சுந்தரின் நண்பர் சுதீன் என்பவருக்கும் மனைவி தாரணிக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுந்தர், மனைவியை கண்டித்ததால் அவர் சுதீனிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதீன் தாரணியின் வீட்டிற்கு வந்து அவரை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via