மங்கையா்கரசி மனது வைத்தால் திருமணம் நடக்கும்=திருமண வரம் தரும் திருக்கோவில்

by Admin / 21-08-2022 03:19:06pm
மங்கையா்கரசி மனது வைத்தால் திருமணம் நடக்கும்=திருமண வரம் தரும் திருக்கோவில்


பிரம்மன்  வழிபட் டு, வேதங்களால்  இறைவனை தினமும் பாராயணம் செய்வதால் வேதிகுடி என்றழைக்கப்படும்  தலம் தஞ்சாவூரில்  அருகே அமைந்துள்ளது. திருமணம் ஆகாமல் தடை ஏற்பட்டவர்  இங்கு  சென்று  வழிபட்டா ல் திருமணதோஷம்  நீங்கி ,திருமணம் நடந்தேறும் .திருமணஞ்சேரி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோவில்  இது.திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும்  தேவாரம்  பாடி சிறப்பு செய்த திருத்தலமாகும் வேதபுரீஸ்வரர் ஆலயம்.

கிழக்கு நோக்கிய முகமாக லிங்க வடிவிலான சிவன் அருளொளி  வீசி  காட்சி  நல்குகிறார் .வேதங்களின் ஆலாபனையில்சிவன் இருப்பதால் வேதபுரீஸ்வர்.வாழைமடுவில் தோன்றியதால் வாழை மடு நாதர் என்ற  பெயரும்  சிவனுக்கு  வழங்கப்படுகிறது. என்று  அழைக்கப்படுவதாகச் சொல்வர். இவ்வேதபுரிள்வரரின் சிறப்பே பங்கு மாதம்மூன்று நாட்கள்   ,அதாவது 13,14,15 ஆகிய தேதிகளில்  சூரியனின்  கதிர்கள்  சுவாமியின்  மீது  விழுவது  சிறப்பிலும்  சிறப்பு.  அன்னை மங்கயர்கரசிநின்ற  கோலத்தில்  காட்சி தந்து  பக்தர்களுக்கு  அருள் பாலிக்கிறார். இத்தாயே, திருமண தோஷம் கொண்டோரின் தடை நீக்கி,வாழ்கைக்கு  நல்லருள்  புரிகிறார்.
இக்கோவில் திருவையாறிலிருந்து 3கி.மீ,திருக்கண்டியூர் தஞ்சாவூரிலிருந்து 16 கி.மீ
தொலைபேசி -91-4362262334,9842978302,9345104187
கோவில் வழிபாட்டிற்குரிய நேரம்-10.00 -12.00 காலை,   மாலை-6.00-8.00
மங்கையா்கரசி மனது வைத்தால் திருமணம் நடக்கும்=திருமண வரம் தரும் திருக்கோவில்
 

Tags :

Share via