கனமழையால் ஆறுகளில் வெள்ளம்

by Editor / 21-08-2022 03:23:26pm
கனமழையால் ஆறுகளில் வெள்ளம்

பருவ மழை காரணமாக கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

ஆறுகளில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் சென்றதால் போலவரம், மற்றும் கபிலேஸ்வரம் பகுதிகளில் உள்ள 100-கணக்கான கிராமங்களில் மழை வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்தது. இடுப்பளவுக்கு மேல் மழை வெள்ளம் செல்வதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via