வீட்டில் பிரசவம் பார்த்தால் தாய், சேய் உயிர்யிழப்பு

by Editor / 21-08-2022 03:55:00pm
வீட்டில் பிரசவம் பார்த்தால் தாய், சேய் உயிர்யிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிமினி வயல் பகுதியில் வசிப்பவர் தேவன் – லட்சுமி தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் கூலித் தெழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர் இவர்களுக்கு 21 வயதில் பிரியா என்ற மகள் உள்ளார். திருமணம் ஆகாத நிலையில் பிரியா கர்ப்பமுற்று 8 மாதம் கர்ப்பமாய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் பிரியா இறந்துள்ளார்.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக பிரியாவை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கூறியதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்காக உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் பிரசவ வலி காரணமாக பிரியாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பிரியாவுக்கு குழந்தை பிறந்ததாகவும் குழந்தையை புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் வருவாய் துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து கூடலூர் தாசில்தார் தலைமையில் வருவாய் துறை மற்றும் போலீசார் நேற்று மாலை தேவன் வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காதலனால் கர்ப்பம் அடைந்த பிரியாவுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடந்ததா? என்பது குறித்து உடல் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via