ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் - அமைச்சர் தகவல்

by Staff / 22-02-2024 01:46:06pm
ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் - அமைச்சர் தகவல்

ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசை விட தமிழ்நாடு அரசே கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய வறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். திருநங்கைகளின் உயர்கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நிதியையும் வழங்கவில்லை என கூறினார்.

 

Tags :

Share via