இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடமுதலமைச்சர்   கடிதம்

by Admin / 25-07-2023 09:47:22pm
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடமுதலமைச்சர்   கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினைத் திரும்ப ஒப்படைக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி  ஒன்றிய அமைச்சர் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

.அதில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பயினால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சூழ்நிலையில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க தூதரக அளவில் முயற்சிகளை முன்னெடுக்குமாறு தான் நன்மையில் கோரிக்கை விடுத்ததாகவும் இருப்பினும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை  கடற்படையினால்  தொடர்ந்து கைது  செய்யப்படுவது  குறித்து  ஆழ்ந்த கவலையுடனும் ஏமாற்ற உணர்வுடன்  இந்த கடிதத்தை எழுவதாக முதலமைச்சர்  குறிப்பிட்டுள்ளார் . இந்தியாவிற்கு இலங்கை அதிபர் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த போது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து இந்திய பிரதமர்  விவாதிக்க வலியுறுத்தி இருந்ததாகவும் மீனவர் பிரச்சனையில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மதிக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கும் இலங்கை அதிபருடன் ஆன சந்திப்பு வழிவகுக்கும் என தாம் நம்பியதாகவும்  தமிழ்நாடு முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடமுதலமைச்சர்   கடிதம்
 

Tags :

Share via

More stories