தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடர் மழைக்கு வாய்ப்பு

by Editor / 24-08-2022 12:37:12pm
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடர் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Tags :

Share via