தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வருகிற 5ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி

by Editor / 03-09-2022 08:42:33pm
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வருகிற 5ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா வருகிற செப்.5ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via