கோடைவெப்பகாலத்தில் டாஸ்மாக் கொள்ளை.

by Editor / 25-05-2023 08:19:16am
கோடைவெப்பகாலத்தில் டாஸ்மாக் கொள்ளை.

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் பகுதியில் 10679 என்கின்ற டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் விவசாய கூலித் தொழிலாளர் என்பதால் இரவு நேரங்களில் மது வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக சென்று மது வாங்குவது வழக்கமாக இருந்து வருகிறது, இந்த நிலையில் இந்த கடையில் பீர் விற்பனையும் கோடை வெயில் கொடுமை என்பதால் அதிகமாக நடந்து வருகின்றது. இதில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூபாய் பத்து வீதம் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நேற்று 24ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பீர் வாங்கி உள்ளார், இரண்டு பீர் வாங்கவே அவரிடம் கூடுதலாக பத்து பத்து ரூபாய் என 20ரூபாய் வசூல் செய்துள்ளனர் எதற்கு கூடுதலாக ரூபாய் என்று அவர் கேட்டதற்கு கரண்ட் பில் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளதால் கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவதாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார், மேலும் கூடுதலாக வாங்கும் பணத்திற்கு ரசீது வேண்டும் என்று மது வாங்க வந்தவர் கேட்டப் பொழுது கடை விற்பனையாளர் அதெல்லாம் கொடுக்க முடியாது வெயிட் பண்ணி சரக்கை வாங்கி செல் என்று கூறியுள்ளார் போன போகட்டும் என கூறி கூடுதலாக பத்து பத்து ரூபாய் கொடுத்து விவசாயி பீர் வாங்கி சென்றுள்ளார், தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் தென்காசி,செங்கோட்டை,குற்றாலம்,பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில்  நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விலை  உயர்த்தி விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tags : tasmak

Share via