திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டி- மம்தா பானர்ஜி அறிவிப்பு

by Staff / 24-01-2024 01:03:10pm
திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டி- மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளின், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததாலும், காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் நடவடிக்கையாலும் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார். காங்கிரஸ் வெற்றி பெற திரிணாமூல் காங்கிரஸின் தயவு தேவையில்லை என அவர் கூறியிருந்த நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக நடக்காததால் மம்தா தனித்து போட்டியிடுகிறார்.

 

Tags :

Share via