அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன்

by Staff / 07-02-2024 05:16:05pm
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று புதன்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்க இயக்குனரகம் (ED) முன்பு வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே 5 முறை நோட்டீஸ் கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், கெஜ்ரிவால் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில், அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via